வெள்ளி, செப்டம்பர் 28, 2007

தங்கை ஒருத்தி இருந்திருந்தால்!!

ங்கை ஒருத்தி இருந்திருந்தால்,
முற்றத்தில் முகமலர்ந்த முல்லையும் மல்லிகையும்
தினம் தினம் அவள் கூந்தலில் கும்மாளமிட்டிருக்கும்!!

கவிதையென்று நான் எழுதும் வார்த்தைகளை
விரும்பி வாசித்து விமர்சித்திருப்பாள்!!

சின்ன சின்ன என் தேவைகளை தெரிந்துகொண்டு
சிபாரிசு செய்திருப்பாள் அப்பாவிடம்!!

அம்மாவிற்கு உதவிகளை
அக்கறையாய் செய்திருப்பாள்!!
அதவல்ல இதுவென்று அடிக்கடி தன்
அண்ணியிடம் கேலி செய்து சிரித்திருப்பாள்!!

வார்த்தைகளால் அவளை வம்பு செய்யும்போதெல்லாம்
பொய் கோபம் கொண்டு பேசாதிருந்திருப்பாள்!!

தங்கை ஒருத்தி இருந்திருந்தால் - என்
சுவாச வழிகளில் மறைந்திருந்து
பாச மழையென பொலிந்திருப்பாள்!!

தங்கை ஒருத்தி இருந்திருந்தால்,
அண்ணனின் கடமைகளை அன்போடு செய்திருப்பேன்
அடுத்த பிறவியிலும் வேண்டி நின்றிருந்திருப்பேன!!

வெள்ளி, செப்டம்பர் 07, 2007

மழைக் காலம்!!

ண் வாசனை வீசி சிந்தனை மாற்றி
மிடுக்கான மின்னலுடன் இடிமுழங்க
படபடவென்று சுடசுட மேனியில் விழும்போது
இருபது வயதின் வேகம் எழுபதில் ஏறும்!
பட்டுத் தெரிக்கும் நீர்த்துளியில்
விட்டு உடையும் நீர்க்குமிழி!
கரம் பிடித்து நடைபழகும் மழலையாய்
குடை பிடித்து சாரல் மழையில் குதூகலமாய்
கும்மாளமிடும் பள்ளிப் பருவம்!
வெளுத்துக்கட்டிய அடைமழையில்
வெள்ளை ரோஜாவின் மொட்டுக்களெல்லாம்
சீக்கிரமாய் சிரித்து நிற்கும்!
மழை நின்ற நேரத்தில்
கல்கண்டு குமுதமெல்லாம்
காகித கப்பல்களாய் முற்றக் கடலில்!
மரக்கிளைகளை குலுக்கி மழையென கூறி
மகிழந்திடும் மனங்கள்!
தேங்கிய நீரில் சிறகுகளடித்து
தெருவெங்கும் அரங்கேறும் காக்க‍ை குளியல்கள்!!
மழைக்காலம் வந்துவிட்டால் மனமெங்கும் சந்தோசம் தான்!!