வியாழன், ஜனவரி 17, 2013

ரோஜா செடியின் விண்ணப்பமொன்று....


டி காற்றென்றால்
அங்கும் இங்கும் அசைந்தாடி
நறுமணப் பாடலோடு,
தலையாட்டி தட்டாங்கல்லாடி
குதூகலித்திருந்தோமே!

மங்கையரே,
கூந்தலில் சூடிக் கொள்ள
தேடி வரும்போது,
அய்யோவென ஓடிடத்தான்
அறியவில்லை எங்களுக்கு!
முட்களிருந்தும் கூட
முட்டிவிட மனமில்லை!
அத்தனை பூக்களையும்
தட்டிப் பறித்தீர்களே
தயவேதுமில்லாமல்!
கன்னி பெண் நாங்கள்
கைம்பெண்ணாய் ஆனோமே!

மலர்ந்தவுடன் மங்கையின்
கூந்தலில் குடியேறுவதில்
வருத்தமொன்றும் இல்லை,
அலங்காரமாய் பார்ப்பதில்
எங்களுக்கும் ஆனந்தம் தான்!

ஒய்யார மங்கையரே
ஒரே ஒரு விண்ணப்பம்,
அத்தனை பூக்களையும்
அப்படியே பறிக்க வேண்டாம்,
ஒன்றிரெண்டாவது விட்டு வையுங்கள்
அலங்கரித்து கொள்வதில்
எங்களுக்கும் ஆசையுண்டு!

                       - மே.இசக்கிமுத்து