வியாழன், ஆகஸ்ட் 21, 2014

என்னுள் நனைந்த மழை துளிகள்!


ருப்பட்டி கடுங்காப்பி,
கையில் கொஞ்சம் பொரிகடலை,
தூறல் மழையின் மண் வாசம்,
திண்னையில் தெறித்த மழை துளிகள்,
நினைக்க மறந்த வேளையிலே
நனைத்தது கொஞ்சம்!

வழிந்தோடும் மழைவெள்ளம்,
வரிசையாய் நீர்க்குமிழிகள்,
ஒன்றோடு மற்றொன்று 
உரசிச் சென்று உடையுமது,
பத்தா பதினொன்றா ?
முதலிலிருந்து தொடங்கும் 
மீண்டும் அந்த எண்ணிக்கை!

மழை ஓய்ந்து கூரையில்
வழிந்து வரும் நீர் துளிகள்,
உள்ளங்கையை ஏந்தினேன்,
உற்சாகமாய் தெறித்தங்கு
ஆஹா...
என்னுள் நனைந்த மழை துளிகள்!

                               - மே.இசக்கிமுத்து