வியாழன், டிசம்பர் 22, 2011

மார்கழி மாக்கோலம்!



சா
ணக் கூந்தலில்
பூசணிப் பூச்சூடி,

பொட்டுடன் புள்ளி வைத்த
பொடிப் பொடியாய் - வண்ண
புடவை கட்டி,


கன்னம் குழிவிழ
நாணத்தோடு நகைத்தபடி
மனம் மயக்க,

திரும்பிப் பார்க்க வைக்கும்
தினமொரு ஒப்பனையில்,

எழில் கொஞ்சும் கற்பனையாய்

அதிகாலை நேரத்தில்

விதவிதமாய் வாசலெங்கும்,


மார்கழி மாதமெல்லாம்
கோல மங்கை மலர்ந்திருப்பாள் !

வெள்ளி, ஜூலை 01, 2011

Oh Babies!


















These two little squirrels were saved by me last week, when the labourers removed the squirrel’s nests while doing renovation works in the quarters (1st floor) above to my house. At that time these squirrels were running very slowly here and there in front of my house. I told my wife to save it from the crows and dogs. They were shivering their legs and in the state of afraid as that might have been the first time they are coming out of their nest. Our kids were overjoyed seeing these little ones, by touching them, making sounds like them etc. We put them in the plastic wired basket. We changed the small empty eye drops bottle into small feeding bottle suitable for them and feeding the milk through it. For the first two days they showed little reluctant to come out and take the milk. Slowly they moved friendly with us.

Now it’s a week over, they started running behind us and search for the little feeding bottle for milk when we open it. Eswar and Santhosh started calling them as TIKO the name of the squirrel character in the cartoon “Dora the Explorer”. I know the squirrels will not stay with us like pet animals, when they grow and start jumping, I am sure that one day they will leave our house and go to their world. Till that day we enjoy the presence of little squirrels!

திங்கள், ஜூன் 13, 2011

தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து !


ரலாற்று சிறப்புமிக்க தூத்துக்குடி - கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று (13.6.2011) தொடங்க உள்ளது. பிளமிங்கோ லைனர்ஸின் " ஸ்காட்டியா பிரின்ஸ் " என்ற சொகுசு கப்பல் இன்று தூத்துக்குடியில் இருந்து கொழும்பு செல்லயிருக்கிறது, இந்த கப்பல் சேவையின் மூலம் இந்தியா, குறிப்பாக தென்னிந்தியா - இலங்கை இடையிலான சுற்றுலா மற்றும் வணிகம் மேம்படும். மேலும் இரு நாட்டு மக்களிடையிலான பண்பாடு மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் ஏற்பட இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

இந்த கப்பல் சேவையை 2001ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டிருக்க வேண்டும். 2001ம் ஆண்டு நான் தூத்துக்குடியில் Flyjac Logisticsயில் ஏற்றுமதி ஒருங்கினைப்பாளராக பணியாற்றிக்கொண்டிருந்த போது இந்த பயணிகள் கப்பல் சேவைக்கான ஆயத்த வேலைகள் மும்முரமாக தொடங்கியது. அந்த ஆண்டின் இறுதியிலேயே இக்கப்பல் சேவை தொடங்கப்பட்டுவிடும் என்று பரவலாக பேசப்பட்டது. பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கான முகவர்கள் நியமண விளம்பரங்கள் உள்ளூர் தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருந்தன.

வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டிய சரக்குகளை கையாளும் நிறுவனத்தில் ஏற்றுமதி ஒருங்கினைப்பாளராக பணியாற்றியதால் பல நாடுகளில் உள்ள எங்கள் நிறுவனத்தை சார்ந்த தொழில் ரீதியான முகவர் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் பல பேர்களின் தொடர்பு எனக்கு இருந்தது. அது போல இலங்கையிலும் எங்கள் முகவர் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் பலரின் அறிமுகம் எனக்கு இருந்தது. அதனால் அந்த ஆண்டு தொடங்கப்படவிருந்த பயணிகள் கப்பலில் முதலாவது சேவையில் கொழும்புக்கு செல்ல வேண்டும் எனற ஆசை என்னுள் எழுந்தது. ஆனால் அந்த நேரத்தில் என்னிடம் பாஸ்போர்ட் இல்லை. அடுத்த வாரத்திலேயே திருச்சிக்கு சென்று திருச்சியில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். அம்மா என்னிடம் " எதுக்கு இப்ப பாஸ்போர்ட்? நீ எங்க போக போற? ". எதுக்கும் இருக்கட்டுமே என்று சொல்லிக்கொண்டேன். நான் விண்ப்பித்த ஒரு மாதத்தில் பாஸ்போர்ட்டும் கிடைத்துவிட்டது. ஆனால் பாருங்கள் அரசாங்கம் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்தை கிடப்பில் போட்டது, அதற்கு அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்கள் சொல்லப்பட்டது.

மீண்டும் பத்து வருடங்கள் கழித்து இந்த திட்டம் இப்போது உயிரோட்டம் பெற்றிருக்கிறது. எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் எனது பாஸ்போர்ட்டின் காலம் முடிந்து விட்டதே..என்ன செய்வது, அதை புதுப்பித்தாக வேண்டும், அதற்கெல்லாம் இப்போது என்னிடம் நேரமிருப்பதாக தெரியவில்லை. பிறகு பார்க்கலாம்..எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன்!!! என்றாலும் பாரதியின் இந்த பாடல் என்னுள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது..

" முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
மொய்த்து வணிகர்பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேற் கரையிலே! "

வெள்ளி, ஜூன் 10, 2011

அனுபவமே ஆண்டவன்!!


பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

- கவியரசு கண்ணதாசன்

கவியரசு கண்ணதாசனின் கவிதைகளில் மீண்டும் மீண்டும் நான் படித்து ரசித்த கவிதைகளில் இதுவும் ஒன்று. வாழ்வின் தத்துவங்களை அனுபவித்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற கவிஞரின் கருத்தில் எவ்வளவு உண்மை உள்ளது!!!

வெள்ளி, பிப்ரவரி 25, 2011

இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி !


ண்மையில் நான் தூத்துக்குடிக்கு சென்றிருந்த போது, அங்கு ஒரு விஷயத்தை என்னால் கவனிக்க முடிந்தது. அது அனேக வீடுகளில் தமிழக அரசு வழங்கிய 14" இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி அலங்கரித்துக் கொண்டிருந்தது. அத்தோடு மற்றொன்றையும் சொல்ல வேண்டும். அதன் பக்கத்திலேயே அவர்கள் ஏற்கனவே வீட்டில் வைத்திருக்கும் 21' அல்லது அதற்கு மேற்பட்ட அளவு கொண்ட வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் இருந்தது. சில வீடுகளில் LCD திரை கொண்ட வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் பார்க்க நேர்ந்தது. பலர் ஒரு அறையில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் மற்றொரு அறையில் பெரிய வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும். இன்னும் சொல்லப் போனால் அனேக வீடுகளில் இப்பொழுதெல்லாம் இரண்டு தொலைக்காட்சி பெட்டிகள். நன்றி தமிழக அரசுக்கு!! சிலர் தங்களுக்கு கிடைத்த இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியின் அட்டை பெட்டியை திறக்காமலேயே அதை தேவையற்ற ஒரு பொருள் போல மூலையில் போட்டிருக்கிறார்கள். பொதுவாகவே மக்களுக்கு ஒரு மனோபாவம் இருக்கிறது, அது இலவசமாக எது கிடைத்தாலும் வாங்கி விடுவது, அது தேவையா இல்லையா, உபயோகப்படுமா இல்லையா என்பதையெல்லாம் பார்க்காமல், இலவசம் என்றால் போட்டி போட்டுக்கொண்டு வாங்கும் பழக்கம். நம் ஊரில் சொல்வார்களே, " கப்பல்ல பொண்ணு வருதுன்னா, அவனுக்கு ஒன்று, அவன் அப்பாவிற்கு ஒன்று, அவன் தாத்தாக்கு ஒன்று கேட்பானாம் " அது போல தான்.

3492 கோடியே 72 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவில் 1 கோடியே 62 ட்சத்து 80 ஆயிரம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்க திட்டமிட்டு, இது வரை 1 கோடியே 58 லட்சத்து 228 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப் பட்டுள்ளதாக அண்மையில் வெளியான தமிழக அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 05.02. 2011 அன்று தமிழக அரசு தாக்கல் செய்த 2011-12 ஆண்டிற்கான இடைக் கால வரவு செலவு அறிக்கையில் மேலும் ரூ.249 கோடியில் 10 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிக்ள கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 20.06.2006 தேதியிட்ட அரசாணை எண் 3 ல், " மகளிருக்கு பொழுது போக்கிற்காகவும், அவர்கள் பொது அறிவு பெறவும் வீடுதோறும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, அவை இல்லாத குடும்பங்களுக்கு வழங்க இந்த அரசு கருதியுள்ளது ". இந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் பயன், அதன் உண்மையான பயனாளிகளுக்கு போய் சேர்கிறதா என்றால் உறுதியாக ஆம் என்று சொல்ல முடியாது.

இத்திட்டம் செயல்படுத்துவதில் எங்கோ தவறு நடந்திருக்கிறது. முதலில் அந்தந்த பகுதிகளில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத வீடுகளை அதிகாரிகள் மூலம் கணக்கிடப்பட்டிருக்க வேண்டும். பின்பு அதற்கேற்ப திட்டமிட்டு செலவினங்களை ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். கணக்கெடுப்பில் அரசியல் சம்பந்தப்பட்டவர்கள், அந்த வார்டு உறுப்பினர் போன்றவர்களை ஈடுபடுத்தியிருக்கக் கூடாது. இவ்வாறு செய்திருந்தால் இந்த திட்டத்தின் பயன் அதன் உண்மையான பயனாளிக்கு சென்றிருக்கும். மேலும் அதிகப்படியான மற்றும் தேவையில்லாத செலவினங்களை தவிர்த்திருக்கலாம். அதை கொண்டு நல்ல பல பயனுள்ள திட்டங்களை செயல் படுத்தியிருக்கலாம். இன்னமும் தமிழ் நாட்டில் எத்தனையோ கிராமங்களில் நல்ல சாலை வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. கிராமத்தில் மற்றும் நகரத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மாணவர்களின் பயனுக்காக பல வசதிகளை செய்திருக்கலாம். அந்த நிதியை கொண்டு இன்னும் எவ்வளவோ மக்களுக்கு மிகவும் தேவையான திட்டங்களை செயல்படுத்தியிருக்கலாம்.

பல திட்டங்களை செயல்படுத்துவதில் அரசியலும் அரசியல்வாதிகளும் இடையில் வரும் வரை அத்திட்டத்தின் நோக்கம் முழுமையடையாமல் போய்விடும்..

வியாழன், பிப்ரவரி 10, 2011

கருவறை கதறல்கள்!

நீ சிந்தித்த போதெல்லாம்
உன் சிந்தையில் ஓர் மூலையிலே
கருவென நுழைந்தோமே,
ஒரு வரியில் இரு வரியில் பல வரியில்
முகவரிகள் தருவாயென
முடங்கிக் கிடந்தோமே!
உன்னுள் ஓர் உயிராய் உரைக்கிறோமே,
உறங்கும் நேரத்து உலறல்களென உதறிவிடுகிறாயே!

நீ ஆனந்தமாய் சிரிக்கும் போது
அங்கும் இங்கும் குதிக்கிறோம்!
கோபப்படும் போது
அடுப்பில் அனலாய் சிவக்கிறோம்!
வருத்தப்படும் போது மட்டும்
வழியறியாது விழிக்கிறோம்!
ஏனென்றால்,
உன்னில் எமை காண்கிறோம்,
எம்மை கவிதையாய் பிரசவித்திடு
எம்மில் உனை காணலாம்!!

மானிடராய் ஜனித்திருந்தால்
மாதம் பத்தில் பாரினை பார்த்திருப்போம்!
தாமதமானால் தலைதிரும்பவில்லை என்ற
தலைவலி எங்களுக்கில்லை!
பிரசிவிப்பதை தள்ளி போட்டால்
பிரச்சனையென சொல்லி,
பிள்ளையும் பெண்ணும் பத்திரமாய்
பல வழிகள் இருக்க பயப்படத் தேவையில்லை!

விதைகளாய் மண்ணில் விழுந்திருந்தால்
மழையில் நனைந்து மலர்ந்திருப்போமே!
கதைகளாய் நாங்கள் இருந்திருந்தால் - உன்
மழலையின் மடல்களில் மகிழ்ந்திருப்போமே!
புதிதாய் மறுமுறை பிறந்திருப்போமே!!

உன் மனதில் அல்லவா விழுந்துவிட்டோம்,
உயிர்பெற உருபெற உருக்கமாய் வேண்டுகிறோம்!
கவிதையாய் வெளிவர விரும்புகிறோம்
கனவென கலைய அல்ல
கருத்தென நிலைக்க!
செந்தனலென தெறிக்க!
சிந்தனையில் சுலீரென உரைக்க
பலர் வாசிப்பில் வாழ வேண்டும்!!

அதுவென்று இதுவென்று நீ
அடுக்கடுக்காய் காரணங்கள் ஆயிரம் சொல்லலாம்,
அத்தனையும் சோம்பேறித்தனம்
அடித்து சொல்லிடுவோம்!
பகல் தூக்கத்தை பாதியாய் குறைத்துக் கொள்ளேன்,
ஞாயிறு விழிக்கும் முன்பு
ஞாபகமாய் எழுந்து கொள்ளேன்!

ஐந்து நாட்கள் பணி மிகுதி தான்,
வாரயிறுதி முழுவதும் வேண்டாம்,
முக்கால் மணி நேரம் போதும்,
உன் மனகருவறையிலிருந்து
கவி பிரசவம் சுகமாய் நடந்தேற
முக்கால் மணி நேரம் போதும்!!

உன் சிந்தனை சிதறல்கள்,
கவி சிற்பமாய் காகிதத்தில் விழும் நாள்,
எங்கள் விடியலின் முதல் நாள்!
அது வரை கண்ணீர் கதறல்கள்!!