வியாழன், டிசம்பர் 22, 2011

மார்கழி மாக்கோலம்!



சா
ணக் கூந்தலில்
பூசணிப் பூச்சூடி,

பொட்டுடன் புள்ளி வைத்த
பொடிப் பொடியாய் - வண்ண
புடவை கட்டி,


கன்னம் குழிவிழ
நாணத்தோடு நகைத்தபடி
மனம் மயக்க,

திரும்பிப் பார்க்க வைக்கும்
தினமொரு ஒப்பனையில்,

எழில் கொஞ்சும் கற்பனையாய்

அதிகாலை நேரத்தில்

விதவிதமாய் வாசலெங்கும்,


மார்கழி மாதமெல்லாம்
கோல மங்கை மலர்ந்திருப்பாள் !

3 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

மார்கழியில் மலரும் கோலம் போலவே கவிதையும் அழகு.

நலமா?

மே. இசக்கிமுத்து சொன்னது…

நன்றி சகோதரி!
நான் நலம், நீங்கள் நலமா?
அலுவலக வேலைப் பளு காரணமாக பல நாட்களாக வலை பதிவு பக்கம் வர இயலவில்லை.

பெயரில்லா சொன்னது…

Sir, Fantastic. These lines are amazing and I wonder about your skill