செவ்வாய், ஏப்ரல் 21, 2015

நிழலாடும் நினைவுகள்...

டைமழை இரவின்
ஆனந்த உறக்கம்!

நிலவில்லா இரவுகளில் 
நீட்சிகொள்ளும் காரு வானம்!

காற்றடி மாதத்தில்
கரையுமந்த காக்கை கூடு!

குத்த வைத்து கதை சொல்லும்
குளக்கரை கருங்கல்!

வெயில் கால மதியத்து
வெட்ட வெளி தேரி மணல்!

முன்னொரு இரவில்
கனவாய் வந்த மொட்டை மரம்!

நினைவுகளில் நிழலாய்
நீண்டு வரும் என் பின்னால்!

திரும்பி பார்க்கும் நேரத்தில்
முன்னால் வந்து முகங்காட்டும்!

தனித்திருக்கும் வேளைகளில்
தவழ்ந்து வரும் நினைவலைகள்,
ஆழ்மனதை வருடிவிடும்
அம்மாவின் தாலாட்டாய்!

                       -மே.இசக்கிமுத்து...