எரிச்சலூட்டும் கேள்விகள்,
எக்காளமான பதில்கள்,
உணர்ச்சிகளை உரசிப் பார்த்து,
ஆத்திரத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு
எக்காளமான பதில்கள்,
உணர்ச்சிகளை உரசிப் பார்த்து,
ஆத்திரத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு
அமைதியே பதிலாகத் தருவதில்
தயக்கமேதும் எனக்கிருந்ததில்லை !
தயக்கமேதும் எனக்கிருந்ததில்லை !
எடுத்துரைத்த என்
எண்ணங்கள் யாவும்
உதாசீனப்பட்டு உடையும் போது,
கருத்துகள் ஒவ்வொன்றும்
கண்டுகொள்ளாமல் விடப்படும் போது,
வார்த்தைகளுக்கு வரப்பமைத்து
மௌனமாய் இருப்பதில்
மனதில் ஓர் அமைதி !
புயலென வார்த்தைகள்
புறமுதுகில் விழுந்தாலும்,
தலையசைத்து மௌனித்து நிற்கும்
சிறு புற்களை பெரும் புயலென்ன
செய்து விடப்போகிறது !
ஒரு வேளை
என் மௌனம் உங்கள் மனதை
ஏகாந்த நேரத்திலும்
எரிச்சலடைய செய்யலாம்,
அதற்கெல்லாம் நான் பொறுப்பென்று
நீங்கள் நினைத்துக் கொண்டால்
அது உங்கள் கவலை !
பிடிவாதக்காரனென்றோ,
கோழை இவனென்றோ,
அகம்பாவம் அதிகமென்றோ,
ஆளுக்கொரு பக்கம்
அங்கலாய்த்துக் கொண்டாலும்,
மௌனமாய் தான் கடந்து செல்வேன்!
பதற்றப்பட வேண்டாம்,
என்னை வெற்றி கொண்டதாய்
எண்ணிக் கொள்ளுங்கள் !!
- மே. இசக்கிமுத்து


