வியாழன், நவம்பர் 25, 2010

மழை கவிதை!!










மழை
!

எண்ணற்ற
ஆசைகளை
நெஞ்சில் சுமந்து கொண்டு
தன் காதலியை பார்க்க ஓடோடி வந்தது மேகம்,
பாவம்,
காதலியை காணாமல் விம்மிபோனது!
மலமலவென்று பூமியில் விழுந்தது
மழை (கண்ணீர்) துளிகள்!!

* * *

மழை!

நிலவு பெண்ணை மணமுடிக்க
வானில் சுயம்வரம் நடக்கிறதோ?
இடி முழக்கமிட்டு மிடுக்காக
வந்த பின்பு,
வானவில்லை ஒடிக்க முடியாமல்
தோற்று போன வீரர்களின்
வியர்வை துளிகளோ?

* * *

மழை!

வான மாளிகையில்
குடியிருக்கும்
குடும்பத்தில் என்ன கலாட்டா?
நட்சத்திர குழந்தைகள்
கண்ணீர் சிந்துகிறார்களே!

- மே. இசக்கிமுத்து