வியாழன், நவம்பர் 25, 2010

மழை கவிதை!!










மழை
!

எண்ணற்ற
ஆசைகளை
நெஞ்சில் சுமந்து கொண்டு
தன் காதலியை பார்க்க ஓடோடி வந்தது மேகம்,
பாவம்,
காதலியை காணாமல் விம்மிபோனது!
மலமலவென்று பூமியில் விழுந்தது
மழை (கண்ணீர்) துளிகள்!!

* * *

மழை!

நிலவு பெண்ணை மணமுடிக்க
வானில் சுயம்வரம் நடக்கிறதோ?
இடி முழக்கமிட்டு மிடுக்காக
வந்த பின்பு,
வானவில்லை ஒடிக்க முடியாமல்
தோற்று போன வீரர்களின்
வியர்வை துளிகளோ?

* * *

மழை!

வான மாளிகையில்
குடியிருக்கும்
குடும்பத்தில் என்ன கலாட்டா?
நட்சத்திர குழந்தைகள்
கண்ணீர் சிந்துகிறார்களே!

- மே. இசக்கிமுத்து

5 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

//வானவில்லை ஒடிக்க முடியாமல்
தோற்று போன வீரர்களின்
வியர்வை துளிகளோ?//

இது அழகு எனில்..

நட்சத்திரக் குழந்தைகளின் கண்ணீர் நெகிழ வைக்கிறது.

அடிக்கடி எழுதுங்கள் இசக்கி முத்து.

ஹேமா சொன்னது…

வணக்கம் இசக்கிமுத்து.மூன்று மழைத் தூரல்கள்.நிறைவான அழகுக் கற்பனை.தமிழ்நாட்டில் அதிக மழை என்று செய்திகளில் பார்த்தேன்.
ஆனால் உங்கள் பக்கத்தில் அதன் தாக்கம் !

ராமலக்ஷ்மி சொன்னது…

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்:)!

Unknown சொன்னது…

வரிகள் அருமை..வாழ்த்துகள்

ஜெஸ்வந்தி - Jeswanthy சொன்னது…

Nice.வாழ்த்துகள்.