வெள்ளி, நவம்பர் 21, 2025

மௌனம் !




 எரிச்சலூட்டும் கேள்விகள்,
எக்கா
மான பதில்கள்,
உணர்ச்சிகளை உரசிப் பார்த்து,
ஆத்திரத்தை எதிர்பார்
ப்பவர்களுக்கு
அமைதியே பதிலாகத் தருவதில் 
தயக்கமேதும் எனக்கிருந்ததில்லை !

எடுத்துரைத்த என் 
எண்ணங்கள் யாவும் 
உதாசீனப்பட்டு உடையும் போது,
கருத்துகள் ஒவ்வொன்றும் 
கண்டுகொள்ளாமல் விடப்படும் போது,
வார்த்தைகளுக்கு வரப்பமைத்து
மௌனமாய் இருப்பதில் 
மனதில் ஓர் அமைதி !

புயலென வார்த்தைகள் 
புறமுதுகில் விழுந்தாலும்,
தலையசைத்து மௌனித்து நிற்கும் 
சிறு புற்களை பெரும் புயலென்ன 
செய்து விடப்போகிறது !

ஒரு வேளை 
என் மௌனம் உங்கள் மனதை
ஏகாந்த நேரத்திலும் 
எரிச்சலடைய செய்யலாம்,
அதற்கெல்லாம் நான் பொறுப்பென்று
நீங்கள் நினைத்துக் கொண்டால்
அது உங்கள் கவலை !

பிடிவாதக்காரனென்றோ,
கோழை இவனென்றோ,
அகம்பாவம் அதிகமென்றோ,
ஆளுக்கொரு பக்கம் 
அங்கலாய்த்துக் கொண்டாலும்,
மௌனமாய் தான் கடந்து செல்வேன்!
பதற்றப்பட வேண்டாம்,
என்னை வெற்றி கொண்டதாய்
எண்ணிக் கொள்ளுங்கள் !!

                  -  மே. இசக்கிமுத்து

7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

மிக அருமையான கவிதை வாழ்த்துக்கள் இசைக்கி முத்து

பெயரில்லா சொன்னது…

அருமையானது

பெயரில்லா சொன்னது…

🤔🤔🙄

மே. இசக்கிமுத்து சொன்னது…

நன்றி

மே. இசக்கிமுத்து சொன்னது…

நன்றி

மே. இசக்கிமுத்து சொன்னது…

பூனைக்குட்டி 😊😊

பெயரில்லா சொன்னது…

நீயா டா...
கவிஞன் டா நீ....