வியாழன், அக்டோபர் 10, 2013

மறந்தும் நீ ..

வண்ணத்துப் பூச்சியாய்
வண்ணங்கள் காட்டி
வளைந்து வளைந்து எனை
அழைத்து செல்கிறாய் !

இறக்கை முளைத்ததாய்
இரு கையசைத்து தொடர்கிறேன் நான் !

மலரோடு மலராக நீ
மறந்தும் மறைந்துக் கொள்ளாதே
விழுந்து விடுவேன் நான் !  

                              - மே.இசக்கிமுத்து..