வியாழன், மார்ச் 13, 2014

அறிவிலியாய் இருந்து விடு!


ரியெனப் பட்டதை
சட்டெனச் சொல்லி
புரிய வைத்த முயற்சிகளெல்லாம்
மலரினை மறைத்து
முற்களை பறித்த காயங்களாய்
ஆறிட அடம்பிடித்துக் கொண்டிருந்த போது,

பட்டுணர்ந்த ஞானமொன்று
நெஞ்சினுள்ளமர்ந்து சொன்னதின்று,
அறிவிலியாய் இருந்து கொண்டு
ஆமாம் சரியென்றும்
தவறென்று தெரிந்தாலும்
தலையாட்டி வைத்து விடு!

மகிழ்ச்சியில் முகமும்
மலர்ந்திடும் மலராய்!
உறவினர் நண்பர்கள் ஊரார்
உறவினில் விசனங்கள் தவிர்த்திட
சமயத்தில்
அறிவிலியாய் இருப்பதில்
ஆதங்கம் தேவையில்லை!

சிரித்துக் கொண்டே
புரிந்து கொண்டேன்,
அறிவிலியாய் இருப்பதற்கும்
ஞானமொன்று வேண்டுமென்று!

                                  -மே.இசக்கிமுத்து

கருத்துகள் இல்லை: