வெள்ளி, செப்டம்பர் 28, 2007

தங்கை ஒருத்தி இருந்திருந்தால்!!

ங்கை ஒருத்தி இருந்திருந்தால்,
முற்றத்தில் முகமலர்ந்த முல்லையும் மல்லிகையும்
தினம் தினம் அவள் கூந்தலில் கும்மாளமிட்டிருக்கும்!!

கவிதையென்று நான் எழுதும் வார்த்தைகளை
விரும்பி வாசித்து விமர்சித்திருப்பாள்!!

சின்ன சின்ன என் தேவைகளை தெரிந்துகொண்டு
சிபாரிசு செய்திருப்பாள் அப்பாவிடம்!!

அம்மாவிற்கு உதவிகளை
அக்கறையாய் செய்திருப்பாள்!!
அதவல்ல இதுவென்று அடிக்கடி தன்
அண்ணியிடம் கேலி செய்து சிரித்திருப்பாள்!!

வார்த்தைகளால் அவளை வம்பு செய்யும்போதெல்லாம்
பொய் கோபம் கொண்டு பேசாதிருந்திருப்பாள்!!

தங்கை ஒருத்தி இருந்திருந்தால் - என்
சுவாச வழிகளில் மறைந்திருந்து
பாச மழையென பொலிந்திருப்பாள்!!

தங்கை ஒருத்தி இருந்திருந்தால்,
அண்ணனின் கடமைகளை அன்போடு செய்திருப்பேன்
அடுத்த பிறவியிலும் வேண்டி நின்றிருந்திருப்பேன!!

3 கருத்துகள்:

யாழ்_அகத்தியன் சொன்னது…

nalla irukku

பத்மா சொன்னது…

மிகவும் நன்றாய் உள்ளது.
எனக்கும் அண்ணனை பற்றி இப்படி ஒரு கனவு உண்டு.நிறைய எழுதுங்கள்
தங்கள் அனைத்து விமர்சங்களுக்கும் நன்றி
பத்மா.....

காரூரன் சொன்னது…

நல்லாய் இருக்கிறது. அன்புக்கான தேடுதல் ஒரு சுகமே!