திங்கள், டிசம்பர் 31, 2012

நாட்குறிப்பு 2012 (டையரி)

ன்று நீஆனந்தமாய்
வந்தாய் என் கையில்,
ஆசையோடு எழுதி வைத்தேன் என் பெயரை
அழகிய உன் முகப்பில்!

புத்தாண்டு தீர்மானங்கள் இன்னதானென்று
புதிதாய் கிடைத்த உன்னில் எழுதிகொண்டேன்!

முதலொரு வாரம் இதன்படி செய்யென்று
முத்து முத்தாய் எழுதி வைத்தேன்.
பின்னொரு வாரம் கடமையென
முன்னும் பின்னும்,
கிறுக்கலானது கையெழுத்து...

நாளை நாளையென்று நழுவி சென்றேன்,
பின் அலமாரியில் ஓர் அங்கமானாய்.
அவ்வப்போது தூசி தட்டி
அடுக்கி வைக்கும் பொருளானாய்..

இன்று,
அடுக்கி வைத்த புத்தகங்களை
சுத்தம் செய்த போது,
ஏளனமாய் சிரித்தாய் நீ
உன் கேள்விகள் எனக்கு புரிகிறது,
விடை தெரியாமல் இன்று நீ
விடை பெறுகின்றாய்..

நாளைக்கு புதிதாய் ஒன்று
மறுபடியும் புத்தாண்டு தீர்மானங்கள்..

                                      -  மே.இசக்கிமுத்து..

கருத்துகள் இல்லை: