திங்கள், டிசம்பர் 24, 2012

காட்டுப்பக்கம் தாத்தாவுக்கு...

 
            பள்ளி பருவத்தில் நாம் படித்து, ரசித்து, பாடிய பாடல்களை இப்போது நாம் நினைவுபடுத்தி பார்க்கும் போது அதில் கிடைக்கும் சுகமே தனி தான். நம்மை அந்த காலத்திற்கே அழைத்து சென்றுவிடும், ஒரு வித ஏக்கம் நம் மனதில் வந்து குடியேறிவிடும். அந்த வகையில் நான் முதல் வகுப்பில் படித்த போது தமிழ் பாட புத்தகத்தில் கடைசி பக்கத்தில் இந்த தாத்தா பாட்டு இருந்தது என்று நினைக்கிறேன். கடைசி வரியில் தாத்தா தும்முவதாக வரும் போது ஆசிரியை முக பாவத்தோடு தும்மல் போட்டு சொல்லி தந்ததும், நாங்களும் தும்மி தும்மி விளையாடியதும் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. இந்த பாட்டு உங்களுக்கும் ஞாபகம் வருமானால் வாருங்கள் நாம் நம் பள்ளி பருவத்திற்கே சென்றுவிட்டு வருவோம்....
 
 
காட்டுப்பக்கம் தாத்தாவுக்கு
காடு போல தாடியாம்
மாடி மேல நிக்கும் போது
தாடி மண்ணில் புரளுமாம்
 
ஆந்தை ரெண்டு கோழி மைனா
அண்டங்காக்கா குருவிகள்
பாந்தமாக தாடிக்குள்ளே
பதுங்கிக் கொண்டு நின்றன
 
உச்சி மேல நின்ற தாத்தா
உடல் குலுங்க தும்மினார்
அச்சும் அச்சும் என்றபோது
அவை அனைத்தும் பறந்தன...

2 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

இந்தப் பாடல் இப்போதுதான் அறிய வருகிறேன். அருமை:)!

மே. இசக்கிமுத்து சொன்னது…

நன்றி...